லட்சுமி தேவி இல்லத்தில் குடியேற செய்ய வேண்டிய வழிபாடு

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும்.

அத்தகைய லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

செய்ய வேண்டிய விரத வழிபாடு
  • பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தை வைத்து அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவாள்.
  • உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.
  • திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும்.
  • சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  • லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  • துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.
  • வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.
  • தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.
  • புல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.
  • “ஓம் மகாதேவ்யைச வித்மஹேவிஷ்ணு பத்நீ ச தீமஹிதன்னோ லட்சுமி பிரச்சோதயாத்” இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால் லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
error: Content is protected !!